Monday, July 9, 2012

சேவையிலிருந்து ஓய்வு பெறல் - திரு.ரி.நாகராஜா, மு.உ. வகுப்பு 1


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் பணியாற்றும் திரு. ரி.நாகராஜா, முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு 1 அவர்கள் 09.07.2012 இலிருந்து தனது 60 வது வயதில் ஓய்வு பெற்றுச் செல்கின்றார். இவர் சுமார் 30 வருடம் அரச சேவையில் சேவையாற்றிய சிரேஷ்ட உத்தியோகத்தராவார். இவர் 21.06.1982 இல் சேவையில் இணைந்து பல அலுவலகங்களில் கடமையாற்றி பழுத்த நிர்வாகம் தெரிந்த உத்தியோகத்தராவார்.

அவரின் ஓய்வூதியத்தின் பின்னரான காலம் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக அமைவதற்கு இறைவன் உதவியாயிருப்பான் என்று செயலாளர், உதவிச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் அனைத்து அலுவலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Blogger
சுகாதாரம்

No comments:

Post a Comment